போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் !

79 0

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

தேர்தலை உடனடியாக நடத்துங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் சற்றுமுன்னர் ஆரமபமானது.

இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.