ராஜிதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

225 0

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய 9வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக முறைப்பாடு செய்ய உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

புற்று நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறிய போதிலும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவிட்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புற்று நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தரம் குறைந்த மருந்தை இறக்குமதி செய்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன செய்துள்ள இந்த மோசடியானது நிதி மோசடியை விட மனிதாபிமான பிரச்சினை.

தற்போதைய அமைச்சில் மாத்திரமல்ல அவர் இதற்கு முன்னர் வகித்த மீன்பிடித்துறை அமைச்சிலும் அவர் பல ஊழல்களை செய்துள்ளார் எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.