விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் கைதானவர் விடுதலை

224 0

காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் வைத்து, சந்தேகத்தின் பேரில், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் இவர் கைதுசெய்யப்பட்டார்.

24 மணித்தியாலங்கள், பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இவர் இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேநபர் அல்ல எனத் தெரிவித்த பொலிஸார், அவரை விடுவித்துள்ளனர்.