களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறைக் கைதியின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல்

267 0

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறைக் கைதியின் உடலத்தை பெற்று கொள்வதற்கு அவரின் குடும்பத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட முன்வரவில்லை என தெரியவந்துள்ளது.

அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு தரப்பினரால் உறவினர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள பாதாள குழு உறுப்பினரான சமயங்யின் உடலம், களனி பட்டிபொல பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 3 சிறை கைதிகளின் உடலங்கள் கடுவலை – கொரதொட – அல்விஸ்வத்தை, முதுலந்த வத்தை மற்றும் கொங்காஹஹேன பிரதேசங்களில் அமைந்துள்ள அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை கொலை செய்வதற்காக வந்த சந்தேக நபர்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில் தெற்கு அதிவேக பாதையில் தொடங்கொட நுழைவாயில் மற்றும் களுத்துறை சிறைச்சாலையை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராக்களின் பதிவுகளை காவற்துறை சோதனை செய்து வருகின்றது.