குளியாப்பிட்டியவில் தொழில்நுட்பக் கல்லூரி

243 0

கொரியா குடியரசு வழங்கவுள்ள 1,911 மில்லியன் ரூபாய் நிதியில்,  குளியாபிட்டியவில் புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியற் கல்லூரி அமைக்கப்படவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, கல்வி அமைச்சில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில்,  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்,  கொரியா குடியரசின் விசேட பிரதிநிதி லீ லொங் கூ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டயாராச்சி, கொரியா குடியரசின் விசேட பிரதிநிதி லீ லொங் கூ  ஆகியோர், ஒப்பந்தத்தில் கைசாத்து இட்டனர்.