ஐநா பொதுச் செயலர் அந்தோனியோ குட்ரெஸ் விரைவில் சிறீலங்காவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று புதிய ஐநா பொதுச் செயலர் அந்தோனியோ குட்ரெசைச் சந்தித்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறீலங்காவுக்குப் பயணம் செய்யுமாறு ஐநா பொதுச் செயலருக்கு அழைப்பு விடுத்தார்.
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை ஏற்றுள்ள ஐநாவின் பொதுச் செயலர் விரைவில் சிறீலங்காவுக்குப் பயணம் செய்வார் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அந்தோனியோ குட்ரெஸ் ஐநா பொதுச் செயலாகப் பதவி ஏற்றபின்னர் சிறீலங்காவுக்கு பயணிக்கும் முதல் பயணம் இதுவாகும்.