கடலில் மூழ்கிய சிறுவர்கள் மீட்பு

227 0

பெந்தோட்டைக் கடலில் குளிக்கச் சென்றபோது, கடலில் மூழ்கிய மூன்று சிறுவர்களில் இருவரை, பிரதேசவாசிகள் மீட்டுள்ளதுடன், ஒருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்கா நகரைச் சேர்ந்த 13 – 15 வயதுக்கு இடைப்பட்ட மூன்று சிறுவர்களே,  இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். மீட்கப்பட்ட இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.