சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இரண்டு முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவிலும் குற்றவியல் விசாரனைப் பிரிவிலும் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஒரு முறைப்பாடை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, தற்பொழுது சுகாதார அமைச்சராக உள்ள காலப்பகுதியில் டெண்டர் நடைமுறைகளை மீறி மருந்து இறக்குமதி செய்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி. சொய்ஸா மற்றைய முறைப்பாட்டை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

