வித்தியா கொலையாளி சுவிஸ்குமாரின் தாய் சிறைச்சாலையில் உயிரிழப்பு

478 0

ads-1புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளி சுவிஸ்குமாரின் தாயார் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
வித்தியாவின் தாய்க்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சால் சுவிஸ்குமார் மற்றும் உசாந்தன் ஆகியோரின் தாய்மார்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சுவிஸ்குமாரின் தாயார் சுகயீனப்பட்டுள்ளார் என்றும் அவருக்கான வைத்திய வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிணை அனுமதியும் மன்றில் கோரப்பட்டிருந்தது.
இருப்பினும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் சாட்சியங்கள் பாதுகாப்பு சட்டத்தின்பிரகாரம் அவருக்கு பிணை வழங்க மறுப்புத் தெரிவித்திருந்தது.
ஆனாலும் சுவிஸ்குமாரின் தாயார் எப்போது வேண்டுமென்றாலும், அவர் விரும்பிய வைத்திய சாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.
இதன்படி அவர் யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்திய சாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இருந்த போதும் அவர் நேற்று சிறைச்சாலையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிளந்துள்ளார்.