மண்மேடு சரிந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

259 0

மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு குறித்த வேலைத் திட்டத்தை மேற்கொண்டு வரும் சீன நிறுவனம் இணங்கியுள்ளது.

இதற்மைய உயிரிழந்த இரு ஊழியர்களின் குடும்பத்திற்கும் 15 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளதாக, தொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.