அவசர பாராளுமன்ற அமர்வு ஒன்றை கோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

270 0

மத்திய வங்கி பிணை பத்திர பரிமாற்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கருத்து வௌியிட அவசர பாராளுமன்ற அமர்வு ஒன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை பத்திர பரிமாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் விரல் நீட்ட முற்படுவது குறித்து கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த குற்றச்சாட்டுக்களை நிதி அமைச்சர் மீளப் பெற வேண்டும் எனவும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.