களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் – தப்பிச் செல்ல பயன்படுத்திய வெள்ளை வேன் கடத்தல்.

280 0

களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் தாரிகள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய வெள்ளை வேன், கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி மருதானைப் பகுதியில் வைத்து கடத்திச் செல்லப்பட்டது என்று தெரியவந்துள்ளது.

காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
கெப் ரக வாகனம் ஒன்றில் பிரவேசித்த அவர்கள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு, குறித்த வெள்ளை வேனில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெள்ளை வேனில் உரிமையாளரிடம் இது தொடர்பில் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அவர்கள் சம்பவ இடத்துக்கு பிரவேசிக்க பயன்படுத்தி கெப்ரக வாகனம், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடையது என்று அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.