யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்த மனிதநேய ஈருருளிப்பயணம்.

270 0

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐ.நா சபைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. அந்தவகையில் நேற்று 22.2.2023 யேர்மனி நோக்கிப் பயணித்து மாலை டில்லிங்கன் என்ற இடத்தில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து இன்று(23.02.2023) அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் சார்புறுக்கன் நகரத்தை அடைந்து. அங்கு அரசியற் சந்திப்பினைத்தொடர்ந்து மனு கையளிக்கப்பட்டு, தொடர்ந்து யேர்மனி லன்டோவ் நகரம்நோக்கி பயணிக்கின்றது. நாளை ஒன்பது மணிக்கு லன்டோ நகர முதல்வரைச் சந்தித்து மனு கையளித்துவிட்டு யேர்மனியின் முக்கிய நகரமாகிய கால்ஸ்றூவ நகரம் நோக்கி பயணித்து அங்கு பகல் ஒரு மணிக்கு நகர முதல்வரைச் சந்திக்கவுள்ளது.பின் பிரான்சு நாட்டைநோக்கி பயணிக்கவுள்ளது.

ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப் போராட்டக்காரர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு இப்போராட்டங்களில் இணைந்து கொள்வதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணிப்போம்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

என்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணா அரசியல் எழுச்சியினை உளமேற்று பயணிப்போம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.