இலங்கையின் நிதி உத்தரவாதங்கள் தொடர்பில் ஐ.எம்.எவ் கொண்டுள்ள நம்பிக்கை

83 0

இலங்கை தனது இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்தும் விரைவில் நிதியுதவிக்கான உத்தரவாதங்களைப் பெறும் எனவும், அவ்வாறு கிடைத்தால் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அனுமதி வழங்கும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

‘நிதி உத்தரவாதங்களை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இலங்கையர்கள் மேற்கொள்கின்றனர். சர்வதேச நாணய நிதியத்தை சேர்ந்த நாங்கள் அனைத்து மட்டத்திலும் அவர்களுக்கு உதவுகின்றோம்’ என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக்கிற்கான தலைவர் கிருஸ்ணா சிறிநிவாசன் தெரிவித்துள்ளார்.