உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் ஜனாதிபதியின் முயற்சிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது, நாட்டின் நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தயார் இல்லை என்ற காரணத்தினால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
அடுத்த வருடம் தான் எந்த தேர்தலும் இடம்பெறும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை வெறுக்கத்தக்கதாகும்.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணித்தார்கள்.
நாட்டு மக்கள் செல்வதற்கு தைரியம் இல்லாத காரணத்தினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலை பிற்போட அவதானம் செலுத்தியுள்ளார்.அடுத்த ஆண்டு தேர்தல் இடம்பெறுமா என்பது சந்தேகத்திரியது.
பொருளாதார பாதிப்பு தேர்தலை நடத்த நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட இடமளித்தால் எதிர்வரும் காலங்களில் எந்த தேர்தலும் நாட்டில் இடம்பெறாது,தேர்தலை நடத்தாமல் ஆட்சியில் இருக்கவே ஜனாதிபதியும்,பொதுஜன பெரமுன அரசாங்கமும் முயற்சிக்கிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் ஜனாதிபதியின் முயற்சிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.பாராளுமன்றத்தின் ஊடாக இன்று முதல் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
தேர்தலுக்கு நிதி ஒதுக்க முடியாது என்று குறிப்பிடும் அதிகாரம் திறைச்சேரிக்கு கிடையாது.2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.தேர்தல் செலவுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உண்டு,இவ்விடயம் தொடர்பில் சபாநாயகருடன் இன்று விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என்றார்.

