அரசாங்கத்திற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்குமிடையில் போராட்டம்

207 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் அரசாங்கம் வேறாகவும் தேர்தல் ஆணைக்குழு வேறாகவும் செயற்படுவது இரு தரப்புக்களுக்கிடையில் ஒரு போராட்டம் போல தெரிகிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தம்பலகாமம்,முள்ளிப்பொத்தானை பகுதியில் நேற்று (பெப் 19) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக விரோதமாகும். உடனடியாக தேர்தலை நடாத்த அரசாங்கம் முன்வர வேண்டும் மக்களின் எதிர்பார்ப்பும் தேர்தலை நடாத்த வேண்டும்  என்றார்.