யுஎஸ்எயிட்டின் சிரேஸ்ட அதிகாரி இலங்கைக்கு விஜயம்

84 0

இலங்கை தொடர்ந்தும் அதிகளவான உணவுபாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளது என  உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.

உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான  பதில் இயக்குநர் ஜெராட் ரெபெலோ  இதனை தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட்டின் மனிதாபிமான உதவிகளிற்கான பணியகத்தின் ஆசிய இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிற்கான இயக்குநர் ஸ்டீபனி வில்கொக்கின் விஜயம் குறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஜெராட் ரெபெலோ இதனை தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்ந்தும் மிகவும் அதிகளவான உணவுபாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றது என தெரிpவத்துள்ள அவர் 30 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக வறிய மக்கள் மத்தியிலேயே இந்த பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கமும் மக்களும் வழங்கி வரும் உதவிகள் குறித்து பெரும் நன்றியுடையவர்களாக காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இந்த உதவிகள் உலக உணவு திட்டம் அவசர உதவிகளை வழங்குவதற்கு உதவியாக அமைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் உதவிகள் உலக உணவுதிட்டம் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் உணவுபாதுகாப்பின்மை மோசமான நிலையை அடைவதை தவிர்ப்பதற்கும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுஎஸ்எயிட் இலங்கைக்கான விஜயத்தின் போது இரத்தினபுரிக்கு விஜயம் மேற்கொண்டார் இந்த விஜயத்தின் போது உணவு விலை அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குடும்பங்களை அவர் சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தின் போது  யுஎஸ்எயிட் அதிகாரி உணவு மற்றும் ஊட்டசத்து போசாக்கு நிலைகளை அறிந்துகொள்வதற்காக வறிய கிராம சமூகங்களை சந்தித்துள்ளார்.

இதனடிப்படையில் அவர் இரத்தினபுரிக்கு விஜயம் மேற்கொண்;டார்.

அவர் அங்கு சந்தித்த சமூகம்விரைவில் உலக உணவு திட்டத்தின் மூலம் 20இ000 ரூபாய் உதவியை பெறவுள்ளது.

நான்கு மாதங்களிற்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.