மாத்தறை – ஊருபொக்க – வெரலபனாதர பிரதேசத்தில் அனுமதி பத்திரமின்றி உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று மொரவக்க நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, திருகோணமலை – மொராவெவ பிரதேசத்தில் நேற்று இரவு துப்பாக்கியுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.