சைட்டம் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: 2 பேர் கைது

196 0

சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பிரதான சூத்திரதாரி, இப்பிரதேசத்திலுள்ள ஒரு அரசியல்வாதியென அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் சைட்டம் நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்னவிடமும் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக மேலும் அத்தகவல்கள் கூறியுள்ளன.