இலங்கைக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீசெல்சின் ஜனாதிபதி டேனி பவுரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையிலுள்ள போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை சீசெல்சின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இச்சந்திப்பின் போது சீசெல்ஸ் ஜனாதிபதி டேனி தெரிவித்துள்ளார்.
போதை ஒழிப்பு நடவடிக்கையில் நட்பு ரீதியாக அரசொன்றின் ஆரவு கிடைத்துள்ளமையையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டுள்ளார்.