கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்

233 0

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மீது மட்டக்களப்பு – ஓட்டமாவடி   பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து, ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, வாகரை பிரதேசத்திற்கு வேண் ஒன்றின் ஊடாக பயணித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர், நாவலடி பிரதேசத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த  மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த நிகழ்வை தொடர்ந்து அப் பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரால் வேனை செலுத்தி வந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தாக்கப்பட்டுள்ளார். இதனால் காயமடைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா. திரவியம், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.