இலங்கையில் புதிய நீதியர் யார்? கே.ஸ்ரீபவன் நாளையுடன் ஓய்வு

252 0

இலங்கையின் புதிய நீதியரசரை தெரிவு செய்யும் முகமாக அரசியல் அமைப்பு சபை இன்று இரவு கூடவுள்ளது.

இரவு 9 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, புதிய பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பில் சபாநாயகருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பிரதம நீதியரசராக இருக்கின்ற கே.ஸ்ரீபவன், நாளையுடன் தமது பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

65 வயதான அவர், இலங்கையின் 44வது பிரதம நீதியரசராவார்.

அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே புதிய பிரதம நீதியரசர் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.