பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அணியினர் சந்தித்து…..(காணொளி)

290 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் அணியினர் சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர், அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக, இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்களின் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது