நல்லூர்க் கந்தனின் நெற்புதிர் அறுவடை விழா

149 0

நல்லூரானின் நெற்புதிர் அறுவடை விழா இன்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தைப்பூசத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும், இப்பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரியும் முதலாவது புதிரை அறுவடை செய்ய மட்டுவிலில் உள்ள ஆலயத்திற்கு சொந்தமான வயலுக்கு செல்வார்கள்.

அந்த வயலில் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது செய்து கந்தனுக்கு படையல் பூசைகள் இடம்பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்படும்.

இப்புதிர் விழா 289ஆவது ஆண்டாக இந்த வருடம் கொண்டாடப்பட்டமை குறிப்பித்தக்கது.