மஹிந்தவின் பெயரில் வெளியான வர்த்தமானி விவகாரம்! தடயங்களை அழிக்க முயற்சி?

224 0

மத்திய வங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரில் வெளியான வர்த்தமானி தொடர்பான தகவல்களை அழிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றது.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் அதற்கு முன்னதாக விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அப்போதைய நிலையில் பதவி விலகியிருந்த முன்னாள் ஜனாதிபதியும், முன்னைய நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவின் பெயரில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது.

இதற்கிடையே குறித்த விவகாரம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச வழக்குத் தொடர உத்தேசித்துள்ள நிலையில், வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான தடயங்களை அழிக்கும் முயற்சியில் மத்திய வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.