சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு, 6 பேர் பலி

208 0

களுத்துறை பிரதேசத்தில், சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டில், பாதாள உலகக் குழு தலைவர் என்று கூறப்படும் “சமயங்” என்றழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திர உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரும் உள்ளடங்குவதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும், நான்கு சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு, சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச்சென்றபோதே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேப் ரக வாகனம் ஒன்றில் வந்த சிலரே பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை  இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி குறிப்பிட்டார்.