காணி தகராறு ; இருவர் கொலை

118 0

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் காணி தகராறு காரணமாக தம்பதியினர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (ஜன 27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பலாந்தோட்டை –  ரிதிகம  பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளதாகவும் சில காலமாக நிலவி வந்த காணி தகராறு காரணமாக இந்த கொலை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 66 வயதுடைய ஆண் மற்றும் 62 வயதுடைய பெண் ஒருவர் எனவும் அவர்கள் இருவரும்  திருமணமான தம்பதி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் 66 வயதுடைய மைத்துனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் வீட்டிற்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.