வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்

111 0

யங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைக் காவலில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை விடுதலை செய்யக்கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிய கையெழுத்து போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த போராட்டம் இன்று (28) காலை 10 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையம், இலுப்பையடி பகுதிகளில் வவுனியா மாவட்ட மக்கள் திட்ட ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், அமைப்பின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களை இட்டு ஆதரவினை வழங்கியிருந்தனர்.