கீத் நொயார் கடத்தலுடன் எனக்குத் தொடர்பில்லை – கோத்தாபய ராஜபக்ஷ

279 0

தி நேசன் ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லையென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நான் பாதுகாப்புச் செயலராக இருந்த போது, கொழும்பில் விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக, புலனாய்வு அதிகாரிகளுடன் கிரமமான சந்திப்புகளை நடத்துவது வழக்கம்.

போர் நடந்த சமயம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் புலனாய்வு அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்துவேன். இதனால் விடுதலைப்புலிகளின் இரகசிய செயற்பாட்டாளர்களால் கொழும்பில் மேற்கொள்ளவிருந்த பல தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.

பாதுகாப்புச் செயலராக பணியாற்றிய போது, இராணுவ அதிகாரிகளுக்கு அவர்களின் கடமைகளுக்கு அப்பால் செயற்படுவதற்கான உத்தரவுகளை இடும் அதிகாரம் எனக்கு இருக்கவில்லை.

யாரோ செய்த குற்றங்களை சுமத்துவது நியாயமற்றது. உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்யவேண்டும் எனத் தெரிவித்தார்.