பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்!

208 0

ஆக்கிரமிப்புக்கு எதிரான குறியீட்டு வடிவமாக மாறியுள்ள கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் ஏறத்தாழ ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தமது கொள்கையில் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ள அம்மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி மக்கள் மயப்படுத்தபடவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

இதுகுறித்து தமிழர்தாயகப்பகுதிகளில் நாம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் அமைப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28/02/2017)மாலை 4 மணிக்கு பலாலிவீதி கோண்டாவிலில் அமைந்துள்ள சேவா லங்கா நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொள்கிறது.