புலம்பெயர் மாநாட்டில் இன்று பிரதமர் உரை

412 0

ranil-koriya-001பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கபூர் விஜயத்தின் உத்தியோக நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.
மூன்றாவது புலம்பெயர் மாநாட்டு இன்று ஆரம்பமாகும் நிலையில், அதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆரம்ப உரையினை நிகழ்த்தவுள்ளார்.
இந்த கருத்தரங்கில், ஆயிரத்திற்கும் அதிகமான குடியியல் அமைப்பு பிரதிநிதிகள் பங்குகொள்ளவுள்ளனர்.
இதன்போது 21ஆம் நூற்றாண்டில் உலக அரசியலில் தெற்காசிய வலய நாடுகள் பங்களிப்பு தொடர்பிலும் முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டு ஜனாதிபதி, பிரதமர், அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.