கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் தமிழர்கள் மீது தாக்குதல்

430 0

13706303_1391534454207844_1870433109_nஇன்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில் வைத்து சிங்களவர்களால் தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, இன்று நண்பகல் 12.00 மணியளவில் கதிர்காமத்திலிருந்து ஏழுமலை செல்லும் வழியில், முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனம், கதிர்காமம் ஏழுமலைக்குச் செல்லும் வாகனத்திற்கு முந்திச்செல்ல இடம்கொடுக்கவில்லையென இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ‘இது எங்கட இடம், உங்களை யார் இங்கு வரச்சொன்னது என தகாத வார்த்தையால் திட்டியதுடன், கத்தியால் குத்தியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் இலக்கானா மட்டக்களப்பைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சென்ற வாகனமும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து தாக்குதலுக்குள்ளானவர்கள் கதிர்காமக் காவல்துறையில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.