ஈழத் தமிழர்களுக்கு தமது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிசெய்ய பிரித்தானியாவின் தொழில் கட்சி தீர்மானம்

276 0

ஈழத் தமிழர்களுக்கு தமது வலுவான மற்றும் சாத்தியமான ஆதரவை மீண்டும் உறுதிசெய்ய பிரித்தானியாவின் தொழில் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி இது தொடர்பான கூட்டமொன்றும் நடத்தப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்ப்டட இலங்கை தொடர்பான தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இதன்போது ஆரயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.