மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் சமந்த ஸ்டீபன் இருபது இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்தபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (13) கைது செய்யப்பட்டார்.
உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரால் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடமொன்றின் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு பிரதேச சபைத் தலைவர் இருபது இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவனல்லை நகரில் உள்ள ஹோட்டலில் குறித்த பண தொகையை இலஞ்சமாக பெற முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

