சபரிமலைக்குச் செல்லவிருந்தவர் கட்டுநாயக்கவில் கைது

255 0

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்ற ஒருவர்  விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பொதி ஒன்றில் ரி-56  துப்பாக்கியின் தோட்டா காணப்பட்டதனையடுத்தே சந்தேகத்தின் பேரில் இவர்  கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார். சந்தேக நபர் 47 வயதான ஹட்டனை வசிப்பிடமாக கொண்டவர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது  வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள  இரும்பு விற்பனை நிலையம் ஒன்றில்   இந்த  இரும்புகளை  சந்தேக நபர் கொள்வனவு செய்து   அவற்றை இந்தியாவுக்கு கொண்டு சென்று  விற்பனை செய்யவிருந்தமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சந்தேக நபரின்  இரும்புப் பொதிக்குள்ளேயே  ரி- 56 தோட்டா கண்டெடுக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.