பொலிஸ் அதிகாரி ஒருவரின் சகோதரர் தலைமையில் இடம்பெற்று வந்த கறுவாப்பட்டை திருட்டு அம்பலம்

110 0

கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில காலமாக இடம்பெற்று வந்த கறுவாப்பட்டை திருட்டொன்றை கரந்தெனிய பொலிஸார் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள கறுவாத் தோட்டங்களில் திருடப்பட்ட சுமார் 25 கிலோ கறுவா மீட்கப்பட்டுள்ளதுடன், லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் 4 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சகோதரரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிக விலை கொண்ட அல்பா என்ற கறுவாப்பட்டையை தயாரித்து ஏற்றுமதி செய்வதற்காக இச்செயற்பாட்டை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நீண்டகாலமாக இந்தத் திருட்டை நடத்தி வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.