கொம்­பனித் தெரு மக்களுக்கு நட்டஈட்டை வழங்குக – முஜிபுர் ரஹ்மான்

242 0

முன்னாள் அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­காலத்தில் அபி­வி­ருத்­தியின் போர்­வையில் மிக சூட்­சும­மான முறையில் கொம்­ப­னித்­தெ­ரு­வி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யுடன் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட மக்­க­ளுக்­கான நட்­ட­ஈட்டுக் கொடுப்­ப­ன­வு­களை நல்­லாட்சி அர­சாங்கம் மனி­தா­பிமான ரீதியில் வழங்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்­டுகோள் விடுத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சட்­டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

நகர அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் கடந்த அர­சாங்­கத்தால் கொழும்பு கொம்­பனித் தெருவில் சுவீ­க­ரிக்­கப்­பட்ட வீடுகள், கடை­களின் உரி­மை­யா­ளர் க­ளுக்கு இது­வ­ரை­யிலும் உரிய நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டாத நிலையில் அம்­மக்கள் அலைக்­க­ழிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இம்மக்­களை எமது நல்­லாட்சி அர­சாங்கம் மனி­தா­பி­மானக் கண்­ணோட்­டத்­துடன் நோக்கி அவர்­க­ளுக்­கான நஷ்ட ஈடு­களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

கடந்த அர­சாங்­கத்தால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் கொழும்பில் சுமார் 8 ஏக்கர் பரப்­ப­ள­வுள்ள காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்டு வெளி­நாட்டுக் கம்­ப­னி­க­ளுக்கு தாரை­வார்த்துக் கொடுக்­கப்­பட்­டன.

இதனால் கொம்­பனித் தெருவில் சுமார் 100 – 150 வரு­டங்­க­ளுக்கு மேலாக காணி உறு­தி­க­ளுடன் பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வந்த அப்­பாவி மக்­களும் கடை, வீடு, காணி­களும் பல­வந்­த­மாக அரசால் சுவீ­க­ரிக்­கப்­பட்டு மிகவும் பெறு­ம­தி­வாய்ந்த விலைக்கு வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு விற்­கப்­பட்­டன.

கடந்த அர­சாங்கம் தமது­பை­களை நிரப்பிக் கொள்­வ­தில் குறி­யாக செயற்­பட்­ட­தே­யன்றி இந்த அப்­பாவி மக்­களைச் சிறி­த­ளவும் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. கொழும்பு நகரில் பெரும்­பாலும் வறிய மக்­களே அன்­றாட சிறு உழைப்பில் வாழ்ந்து வரு­கி­றார்கள்.

இவர்­களைப் பொருட்­ப­டுத்­தாது நடந்து கொண்­ட­தாலே இம்­மக்கள் இன்று அலைக்­க­ழிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

சொத்­துக்­களை சுவீ­க­ரித்த நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையும் கருத்­திட்­டத்தை மேற்­கொண்ட இந்­திய நிறு­வ­னமும் ஒப்­பந்தம் ஒன்றை மேற்­கொண்டே இவ்­வே­லைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்­தன. அந்த ஒப்­பந்­தத்தில் என்ன அடங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை நாம் அறியோம்.

ஆனால் வீடுகள் சுவீ­க­ரிக்­கப்­படும் போது அதற்­கான நஷ்­ட­ஈ­டுகள், இழப்­பீ­டுகள் குறித்தும் கருத்தில் எடுத்­தி­ருக்க வேண்டும். அதனை விடுத்து இம்­மக்­களை நக­ரத்­துக்குப் புறம்­பான இடங்­களில் முதியோர் இல்­லங்­களில் அடைத்து வைப்­பது போன்­ற­தொரு நட­வ­டிக்­கை­யையே அப்­போது முந்­திய அரசு மேற்­கொண்­டது.

இம்­மக்­களை கொழும்­பி­லி­ருந்து வெளி­யேற்­றி­யமை ஒரு அடா­வடி நட­வ­டிக்­கை­யா­கவே கருத வேண்­டி­யி­ருக்­கி­றது. தம் சொந்த இடங்­களைப் பறிகொடுத்த இந்த அப்­பாவி மக்கள் இன்றும் வாடகை வீடு­க­ளிலே பல அசெளக­ரி­யங்­க­ளுடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.

எமது நல்­லாட்சி அர­சாங்கம் இம்­மக்­களை ஒரு போதும் கைவி­டாது என்ற நம்­பிக்கை இம்­மக்­க­ளுக்­குண்டு. எனவே இவர்களது விட­யத்தை கவ­னத்தில் கொண்டு இவர்­க­ளுக்­கான இழப்­பீட்டுத் தொகை­களை காலம் தாழ்த்­தாது வழங்க அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்பில் சுமார் 6 ,-7 இலட்சம் மக்கள் வாழ்­கி­றார்கள். இவர்­க­ளது வாழ்­வா­தாரம் உயர்த்­தப்­பட வேண்டும்.

தொடர்ந்தும் இவர்கள் விட­யத்தில் பாரா­முகம் காட்­டப்­ப­டு­மானால் எதிர்­கா­லத்தில் இவர்­களை பாதாள உலகக் கோஷ்­டி­யி­னர்­க­ளா­கவும் போதைப்­பொ­ருட்­க­ளுக்கு அடி­மை­யா­ன­வர்­க­ளா­க­வும் தான் நாம் காணப்­போ­கிறோம். அத்­துடன் ஏற்­க­னவே வறு­மையில் உள்ள இவர்­களை வறு­மைக்­கோட்­டுக்கும் கீழ் மட்­டத்தில் உள்­ள­வர்­க­ளாக மாற்­றாது அதற்கு மாற்று வழி­களை மேற்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

மூன்றாம் உலக நாடு­களில் இதே­நிலை அடைந்­துள்­ளதை நாம் நாளாந்தம் ஊட­கங்கள் வாயி­லாகக் காண்­கிறோம். இந்­தியா, பிரேசில், லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் மக்கள் புறக்கணிக்கப் பட்டதன் பெறுபேறாகவே குழப்பங்கள் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன.

கொழும்பு வாழ் எமது மக்களையும் இந்நிலைக்குத் தள்ளவே கடந்த அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. இந்நிலை தொடரவிடாது எமது நல்லாட்சியிலாவது இம்மக்களுக்குரிய உரிமைகள், தேவைகளை ஈடுசெய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.