கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம் ஆதரவு!

285 0

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்று 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தினர் இன்றைய தினம் வருகைதந்திருந்ததோடு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினையும் இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுத்திருந்தனர்.