பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – 20 பேரிடம் வாக்குமூலம்

241 0

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் ஊடாக, குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்கள் தொடர்பாக தகவலறிய முடியும் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் விமல்ராஜ் நேசன் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நேற்று பிற்பகல் 7 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உந்துருளியில் சென்ற இனந்தெரியாத இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாவட்ட பணிப்பாளர் விமலராஜ் நேசன் சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.