இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை – ஐக்கிய நாடுகள் சபை

233 0

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை உருவாகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடந்த ஆண்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ரிட்டா ஐசக், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 34வது அமர்வுக்கு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாகியும் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாமை அதிருப்தியை தோற்றுவித்துள்ளதாக அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் படையினர் கையகப்படுத்தியுள்ள் 6 ஆயிரத்து 124 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உரிமயாளர்களிடம் கையளிக்கப்படவேண்டும்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை வழங்காமல் இருக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இலங்கையின் பிரச்சினையை தீர்க்க சிறப்பான இணைப்புடனான உண்மை, நல்லிணக்கம் மற்றும் காயங்களை ஆற்றக்கூடிய முன்னெடுப்புகள் அவசியமானவையாகும்.

சில விடயங்களுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி அவற்றை தீர்க்கவேண்டும்.

சிறுபான்மையினத்தவரின் அரசியல் விடயங்களில் அர்ப்பணிப்புக்களுக்கு முன்னிடம் கொடுக்கப்படவேண்டும்.

இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளையும் அரசாங்கம் முன்னெக்கவேண்டும் என்றும் ரீட்டா ஐசக் டியோயே இலங்கை அரசாங்கத்திடம் ரீட்டா ஐசக் கோரிக்கை விடுத்துள்ளார்.