டென்மார்க் வைல மற்றும் கேர்ணிங் நகரங்களில் எழுச்சியிடன் நடைபெற்ற தேசத்தின் குரலின் வணக்க நிகழ்வு.

208 0

டென்மார்க் வைல மற்றும் கேணீங் நகரங்களில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் இடம் பெற்றது. ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், கவிதைகள் மற்றும் சிறப்புரைகளும் இடம் பெற்றன. பொதுமக்களும் மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வின் இறுதியில், தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எழுச்சிக் கோசத்துடன் இனிதே நிறைவுற்றது.

டென்மார்க் கொல்பேக் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  வணக்க நிகழ்வு.

17.12.2022 அன்று சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு கொல்பேக் நகரில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடனும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. முறையே ஈகைச்சுடர் ஏற்றேல், மலர் வணக்கம் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பொதுமக்களும் மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டு எமது தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவு கூர்ந்தனர்.