2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் சீருடை விநியோகிக்கப்படும்.
பல்கலைக்கழக கட்டமைப்பு தற்போது மிக மோசமாக உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் நாட்களில் பல்கலைக்கழக சட்டம் திருத்தம் செய்யப்படும்.
கடுமையான தீர்மானத்தை செயல்படுத்தாவிட்டால் இலவச கல்வி மலினப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி அமைச்சில் வியாழக்கிழமை (டிச. 15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

