வாழைச்சேனையில் கஞ்சா தோட்டம் முற்றுகை

56 0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டம் ஒன்றை நேற்று செவ்வாய்க்கிழமை (13) முற்றுகையிட்ட பொலிஸார் 21 கஞ்சா செடிகளுடன் 60 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாருடன் இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான நேற்று மாலை 5 மணியளவில் புலக்காட்டிலுள்ள பண்ணை ஒன்றை முற்றுகையிட்டனர்.

இதன்போது அங்கு கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்த 60 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன் சுமார் 4 அடி கொண்ட 21 கஞ்சா செடிகளை மீட்டனர்.

இதில் கைதுசெய்யப்பட்டவரை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.