வீதி விபத்துகளில் இருவர் பலி

104 0

இரு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கள் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சியம்பலாண்டுவ – மொனராகலை வீதியில் சியம்பலாண்டுவ பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொனராகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சியம்பலாண்டுவ, ஹெலமுல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் வைத்தியசாலை சுற்றுவட்டத்திலிருந்து சர்வோதயா நோக்கிச் சென்ற கார் அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் சென்ற மற்றொரு காரின் பின்புறம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம், பாலடிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்..