பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகே அடுத்த வருடம் ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபருக்கு எதிராக தொகுக்கப்பட்ட சாட்சியங்களின் சுருக்கத்தை அன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட வசந்த முதலிகே இன்று (13) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

