நடராஜா ரவிராஜ் கொலை நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

397 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கின் நிரபராதியாக்கி விடுதலை செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

அன்றைய தினம் சட்டமா அதிபரும் முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்வதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நடராஜா ரவிராஜின் மனைவி தாக்கல் செய்த மனு மீதான ஆராய்வின் போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.டீ.ஜே மடவல மற்றும் எல்.பீ.டீ தெஹிதெனிய ஆகியோர் இந்த மனுவை ஆராய்ந்துள்ளனர்.