பல்வேறு கொள்ளைகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது

240 0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த இரண்டு பேரை கண்டி மாவட்ட குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களால் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறுபட்ட உபகரணங்கள் மற்றும் பெரும்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உடுநுவர மற்றும் வட்டப்பல பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் , மாத்தளை , கடுகன்னாவ , பல்லேகெலே, மாவத்தகம , பேராதெனிய , பகமுன , நாவுல , கடுகஸ்தொட மற்றும் கண்டி போன்ற பிரதேசங்களில் இவ்வாறு கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட , தொலைக்காட்சிகள் , கணணிகள் , கெமரா, பித்தளை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.