ஜேமன், நைஜீரியா, சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பட்டினியால் உயிரிழக்கலாம் என்று யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 2 வருடங்களாக யுத்தம் நிலவும் ஜெமனில் 4 லட்சத்து 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் கிழக்கு பகுதியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர்கள் மந்த போஷாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜேமனில் கடுமையான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சேவ் த சில்றன் அமைப்பு இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.