பாக்கு மோசடி செய்யும் அமைச்சர் யார்?

220 0

அமைச்சர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து குறைந்த விலைக்கு கொட்டைப் பாக்குகளை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார்.

அவற்றை துறைமுகத்திலிருந்து வெளியில் எடுக்காமலேயே, இலங்கை நாமம் சூட்டப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் இலங்கை பாக்குக்கு அதிக கிராக்கி காணப்படுவதால் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு மோசடி வியாபாரத்தில் ஈடுபடும் அமைச்சர் யாரென்பதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு, இன்று செவ்வாய்க்கிழமை (21.02.2017) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.