யாழ் நகர உணவகங்களில் திடீர் சோதனை

103 0

யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் அமைந்துள்ள உணவகங்களில் யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவரும் உணவகங்களின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த உணவுப்பொருட்கள் உரிமையாளர்களின் சம்மதத்துடன் பொது சுகாதார பரிசோதகர்களால் அழிக்கப்பட்டன.

மேலும், காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்த உணவகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு பொது சகாதார பரிசோதகர்கள் தீர்மானித்துள்ளனர்.